________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
256
A DESCRIPTIVE CATALOGUE OF
A poem in praise of the goddess Minākşi as worshipped in the temple at Madura.
Beginning :
காப்பு. மங்கையிடப் பாக மதுரைவருஞ் சொக்கரிட வங்கயற்கண் ணம்மை யகவலுக்குத்-துங்க வரிமருகா கொன்றை யணிவார் முருகா கரிமுகவா நீயிதற்குக் காப்பு. சீராரும் பூங்க மலத் தெள்ளமுதே சேயிழையே காராரு மேனிக் கனங்குழலே-யாராயும் வேதமுத வாக நின்ற மெய்ப்பொருளே மின்னொளியே யாதி பராபரையே யம்பிகையே-சோதியே யண்டமெல்லாம் போற்று மரும் பொரு ள யாரணங்கே யெண்டிசைக்குந் தாயான வீச்வரியே- தெண்டிரையில் வந்தமுதே யென்று மறவாம லேயிருப்பார் சிந்தைதனி லேயுறையுஞ் செல்வி-.
End:
கொந்தளகப் பந்திக் குயிலே சிவலோகத் தைந்தருவே மூவுலகுக் காரணியே- யெந்தனுடை யல்லல் வினை யெல்லா மகற்றியே யஞ்சவென்று நல்லசிவ பாக்கியத்தை நல்கியே-வல்லபத்தா வாசுமது ரஞ்சித்ர வித்தார மென் றுலகிற் பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு-நேசமுடன் றந்தென்னை யாட்கொண்டு சற்குருவா யென்னிடத்தில் வந்திருந்து புத்தி மதிவிளைத்தச்-சந்ததமு நீயே துணையாக நின்றிாட்சி யுங்கருணைத் தாயே நின் றாளே சரண்.
(கு--1)
இது, மதுரை மீனா க்ஷியம்மை விஷயமானது ; இச்செய்யுள், கலி வெண்பாவே; காப்புச்செய்யுளில் " அங்கயற்கணம்மை யகவலுக்கு', என் றிருப்பது தவறு; அச்செய்யுள் யாப்பிவக்கணந் தெரியாதவர்பா டிச் சேர்த்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது ; இந்த நூல் இந்தப் பிரதியிற் பூர்த்தியாக இருக்கிறது ; செய்யுள் நடை சாதாரணமானது; அச்சிடப்பட்டதன்று.
For Private and Personal Use Only