________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPIS.
லே
Beginning :
உலகம் யாவையு முறுபயன் விளைப்பா னலகில் சோதி யணிகிளர் திருவுரு வுணர்வுயி ரெனக்கலந் துத்தமர் நித்தர் கணமக வாதபொற் கவின்பதி நின்று முரவு நீர் வளைத்த வொன்பானுட் டென்புவப் பரதகண் டத்துட் பழம்பதி யெனப்புகும் விண்டொட நிவந்த பொழில்வட வேங்கடந் செண்டிரை கறங்குதென் குமரியென் றாயிடை யமிழ்தினும் வான் சுவைத் தாகிய மும்மைத் தமிழ்தெரி புலமைச் சான்றோர் மதிக்கு முதுமொழித் தண்டி முதனூ லணியொடும் புதுமொழிப் புலவர் புணர்த்திய வணியையுந் தனாது நுண் ணுணர்வாற் றருபல வணியையும் மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் பொது வியல் பொருள்சொல் வணியெச்ச வியலௌச் சதுர்பெற விரண்டிடந் தழீஇய சார்பெனலாய்க் காரிதந் தருள்கலைக் கடலியற் பெயர்புனைந் தாரியர் துவன்ற வவைக்களத் துரைத்தனன் சிற்குணச் சீநிவாசனின் னருளா னற்பொருள் மூன்றையு நலனுற வுணர்வோன் பெருநிலம் புகழ் திருக் குருகைப் பெருமா ளருள்குரு கூர்வரு மனகன் செழுந்தேன் மருக்கமழ் சீரகத் தார்வணி கன்புகழ் திருக்குரு கைப்பெரு மாள்கவி ராய னருட்குணத் துடன் வளர் சடையன் பொருட்டொடர் நவம்புணர் புலமை யோனே
Beginning :
வெண்பா. திருப்பாவை யென்னத் திருந்தியர்பாத் தந்த திருப்பாவை வில்லிபுத்தூர்ச் செல்வி - யருட்பார்வை வாய்ந்ததனாற் செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா வாய்ந்துரைப்பல் செய்யு ளணி. என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னு தலியெடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனி ன், - அதிகார நுதலிய தூஉம் முன்னர்க்கூறிப் பாந்த சிறப்புப்பாயிரத் தானே உணரப்படும்.
For Private and Personal Use Only