________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
43
மையிற் கிளவியாக்கமென்று பெயர்பெற்று, மற்றேனையோத்தினுண ரும் பொருண் மேலாய் நின்றவாறிலக்கண முணர்த்தினார் ஆண்டும் அவை தம்மையே ஒன்பதோத்தினாலுணர்த்தினாரென்பது.
இனி, பெயர் முதலாகிய நான்கு வகைப்பட்ட சொல்லிர்கு இவ் வோத்தினுட் பொதுவிலக்கண முணர்த்தினார். பெயர்ச்சொல்லதி வக்கணம், வேற்றுமை யோத்தினுள்ளும், வேற்றுமை மயங்கியலுள் ளும், விளிமாபினுள்ளம், உணர்த்தியுணர்த்திப் பெயர்முதலுரியீறாக அவற்ற திவக்கணமும் அடைவே விரித்துணர்த்தி எஞ்சி நின்ற சொற் களை எச்சவியவானுணர்த்தினாரென்க.
இவ்வகையானெல்லா முணர்த்தினாராகலின் ஒன்பதோத்தும் வே ண்டிற்றென்க.
உயர் திணை யென்மனார் மக்கட் சட்டே அஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே. எது.--மக்களென்று சுட்டப்படும் பொருளை உயர்திணையென்று சொல்லுபவாசிரியர். மக்களல்லாத பிறபொருளை அஃறினயென்று சொல்லுபவாசிரியர். அவ்விரு திணையினையுஞ் சொல்லுஞ்சொல்லு முயர்திணைச்சொல்லு மஃறிணைச்சொல்லுமாம். எனவே சொல்லும் பொருளும் வரையறுக்கப்பட்டது.
உயர்திணையென்றது பிறப்பினிற் சிறப்பெய்து தற்கு மக்கணிலைமை மிக்க சார்வாகலான். என்மனார் என்பது என்பவென்னு முற்றுச் சொற்குறைக்கும் வழிக்குறைத்தவென்பதனாற் பகரத்தைக்குறைத்து, விரிக்கும் வழிவிரித்தலென்பதனான் மன்னுமாருமென்பன இரண் டிடைச் சொற்பெய்து விரித்தார். என்றாரென்பதனை என்மனாரென எதிர்காலத்தாற்சொல்லியதென்னை (யெனின்) “இறப்பேயெதிர்வேயா யிருகாலமுஞ் சிறப்பத்தோன்று மயங்கு மொழிக்கிளவி” என்பதர்க வாற் கூறினார். இசைக்குமென்பது, செய்யுமென் னு முற்றுச்சொல். மன்னென்ற இடைச்சொல் மனவென ஈறு திரிந்தது மன்னென்று பாட மோது வாருமுளர். உயர்த்ததிணையெனும் இறந்தகால வினைத் தொகை, உயர் திணையென்னத் தொக்கது, ஆசிரியரென்பது இச்சூத்தி ரத்தில்லையெனின் என்பவென்னு முற்றுச்சொல்லேபெறும் ; முற்றுச் சொல் எச்சப்பெயர் கொண்டு முடியுமென்பதாகலான். அவ்விருதிணை யினையென இரண்டாவது விரித்துரைக்க.
ஆடூஉ வறிசொன் மகடு வறிசொற் பல்வோ ரறியுஞ் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொ லுயர் திணை யவ்வே. எது.- ஆண் மகனையும், பெண்டாட்டியையும், அவ்விருவரது பன் மையாகிய பல்லோரையும் அறிவிக்குஞ்சொல்லொடு பொருந்திய அம்
1.
For Private and Personal Use Only