________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
457
Beginning :
விநாயகர் துதி.
நேரிசை வெண்பா. சீராரும் வேதனடி செய்தக்க நாடகத்தை(ப்) பேராருஞ் செந்தமிழாற் பேசவே - கூராரும் வன்பரசு மானேந்தும் வள்ள(ற்) றருஞ்சுதனை யன் பினுட னேபணிகு வாம்,
தக்கன் வருகிற தரு. இராகம் மத்தியமாவதி-ஆதிதாளம்.
பல்லவி. தக்ஷகப் பிரமன் வந்தான் கொலுவிருக்கத் தக்ஷகப் பிரமன் வந்தான்.
அனுபல்லவி. தக்ஷகப் பிரமன் வந்தான வக்ஷஞ்சே னைகள் சூழ
இ க்ஷண மீசனைப் பக்ஷணஞ் செய்வேனென்று. (தக்ஷகப்) End:
மகாவிஷ்ணு பரமசிவனுக்குச்சொல் பரணி. இறந்தவர் தம்மை யெழுப்பியிங் கிருத்திச் சிறந்திட வே(ழ்)(ள்)வியைச் செய்து முடிப்பீர்.
வசனம். இறந்தவரையெழுப்பி அவர்களை வைத்துக்கொண்டு யாகத்தைச் செய்து நிறைவேற்றிவையும் சாம்பசிவமூர்த்தியே. (கு-பு.)
தக்ஷப்பிரமரென்பவர், ஒரு சமயத்தில் தம்மருமகனாகிய சிவபெரு மான் தம்மைப் பணியவில்லையென்ற கோபத்தால் அவரையும், தம் மகளாகிய உமையையும் அழையாமல், மற்றத்தேவர்களை அழை த்துக் கலைக்கோட்டு முனிவரைக்கொண்டு சர்ப்பயாகஞ்செய்ய, யாகச் செய்தியை நாரதமுனிவர் சொல்லக்கேட்ட உமை, தன் கணவனிடம் விடைபெற்று யாகத்துக்கு வந்தாள் ; ஈன்றோர் உபசரியாது இகழ்ந்த மையால் யாகாக்கினியிலே இறங்கிப் பர்வதராஜ குமாரியாய்த் தோன் றினாள். பார்வதியைப் பிரிந்த துன்பத்தாலெழுந்த கோபத்தால், சிவ பெருமானது நெற்றிக்கண்ணிலிருந்துண்டாகிய வீரபத்திரர், சிவபெ ருமான் கட்டளைப்படியே சென்று பூபத்தம்பத்தைப் பெயர்த்தெறிந்து
For Private and Personal Use Only