________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
453
கார்வாழி நாகவல்லி [6]சமதக் கினியுங்
கவினிரே ணுகைபரசு ராமன் வாழி பார்வாழி வரையரசன் வாழி நல்லோர்
படித்தவரு மெழுதினர்பல் வாண்டு வாழி.
(ஜெமதக்கினி நாடகம் முற்றுப்பெற்றது. (த-பு.)
ரிசீக முனிவரின் குமாரரான ஜமதக்கினி முனிவர் இரேணு கையை மணம்புரிந்து பரசுராமரைப் பெற்றுவளர்த்தார்; வேட்டை க்கு வந்த கார்த்தவீரியார்ச்சுனனுக்கு ஒரு பசுவினுதவியால் விருந்த ளித்தார். அவ்வரசன் அப்பசுவை அபகரித்துக் கொண்டுபோனான். ஓட்டிவரச்சென்ற பரசுராமன் யுத்தத்தில் அவனைக் கொன்ற தனால் அந்தப் பாப பரிஹாரமாகத் தீர்த்தாடனஞ் செய்யச்சென்றார். அச்ச மயத்தில் கார்த்தவீரியன் குமாரர்கள் நிஷ்டையிலிருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்றார்கள். அதனால் பரசுராமர் க்ஷத்ரிய பரம்பரை யை இருபத்தொருமுறை கொவ்வதாகப் பிரதிஜ்ஞை செய்தார். கண வனிறந்த துக்கத்தால் உடன்கட்டையேற மரமேறிக்குதித்துக் கொப் புளங்கொண்ட இரேணுகை, ஒரு வண்ணான் வீட்டிலிருந்து மாமுதலி யவுணவையுண்டு கொப்புளத்தின் கொசுகை வேப்பிலையாலோட்டியும், அதில் வேப்பிலையை யரைத்துப்பூசியும் ஜீவித்திருந்தாள். இவளே வைசூரியின் அதிதேவதை. இவள் ஜமதக்கினியோடிருந்து வாழு நா ளில் ஒரு நாள் கணவரேவற்படி பூசைக்கு ஜவந்திரட்டிவரச்சென்று கந்தருவனிழலை நீரிற்கண்டு கற்புக்குறைப்பட்ட காரணத்தால் இவளைப் பரசுராமர் தகப்பனாரனுமதிப்படி கொன்று பின்பு பிழைப்பித்தார். இவள் பூர்வஜன்மத்தில் புவோமஜையென்னும் பெயர் பூண்டு பிருகு பத்தினியாயிருந்தபொழுது, நாரதர் விசுவகர்மாவைக்கொண்டு செய் வித்த இரும்புக்கடலையைச் சுண்டல் செய்து கற்பிற் பிரசித்திபெற்ற வள். இவளே கோசலையும் தேவகியுமாவாள். என்று இவ்வாறு இந் நூலில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கி
றது.
No. 483. சவ்வ ருண நாடகம்.
SAVVARUNANATAKAM. Substance, paper. Size, 13 X 9 incbes. Pages, 150. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 336. The other work herein is Sakkubaycarittiram la, ') akkanāțakam 1086.
For Private and Personal Use Only