________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
371
அவர்கள் வாய்மொழியையுங் கேட்டு ஜினதேவனே அசத்தியம் சொ ன்ன வனென்றறிந்து மரக்கலத்துள்ள பொருளனைத்தையும் தன தேவ னுக்குக் கொடுக்கும்படி சொல்ல, அவன் 8,000 பொன்னல்லது கொள் ளேனென, அதனைக் கொடுத்து ஜினதேவன் பொன்னனைத்தையும் த ன்ன தாக்கி ஜின தேவனைத் தேசாந்தரமேகும்படி கட்டளை யிட, தன தேவன் வருந்தி என்னையே அவ்வாறு செய்கவென, அரசன் அதிசயி த்துக் கட்டளையைமாற்றி ' உம திஷ்டப்படி நான் இரண்டு செய்தேன்; என திஷ்டப்படி நீர் ஒன்று செய்க ' என்று இரந்து 200,000 பொன்னும் ஆடைமுதலியனவும் அத்தன தேவனுக்கு ஸம்மானஞ்செய்து பூசித்தா னென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 409. தாடிவெண்ணெய்க்காரன் கதை.
TĀDIVENNAIYKKĀRAN KADAI. Pages, 5. Lines, 6 on a page.
Begins on fol. 1750 of the MS. described under No. 375. Complete.
A Jaina story to illustrate the evils arising from an overcovetous imagination. Beginning :
(இனி, பரிமித பரிக் ரஹமென்னும் வாதமில்லாமையால் அனர்த்த மெய்திய தாடிவெண்ணெய்க்காரன் சரிதமாவது)--
ஜம்பூத்வீப் பரதக்ஷேத்திரத்து மதுரையென்னும் நகரத்துள்ளான் தாடி வெண்ணெய்க்காரனென்பான், இவன் ஒருகாரியத்திலும் உத் ஸாஹமிலனாகி அகுசலனாதலில் இவனைப் பந்து வர்க்கமெல்லாம் உபே க்ஷிப்பித்தபின் இவன் போந்து கோவர்த்தனமென்னும் நகரத்துத் தொறுப்பாடியில் வந்து சேர்ந்து இ.ை ச்சியர் மோர்க்கலங்களில் மே ல்மிதக்கிற வெண்ணெய் லேசமெல்லாம் ஈர்க்காலெடுத்தித் திரட்டிக் கொண்டும் அவர்கள் வார்த்த மோர்குக்குமிடத்துத் தனது தாடி யிற்றங்கிய வெண்ணெயை வாங்கிக்கொண்டும் இப்படி நாள் வழி ஒரு பிடி வெண்ணெய் திரட்டி ஜீவித்துச் செல்லா நின்றா(ன்). End: |
அவ்வளவில் காற்கடையிற் கட்டியிருந்த உறியற்று வெண்ணெய்ப் பானை வீழ்ந்து தகர்ந்துடைந்து எரிகின்ற நெருப்பினில் வீழ்தலும் நெ ருப்புப் பொங்கியெழுந்து குடிசைவாசலை மூடிக்கொண்டு சுட்டுவிட் டது. இவனு முட்பட்டு அக்னிபாதையால் மரணமடைந்தனன்.
24-AT
For Private and Personal Use Only