________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
356
A DESCRIPTIVE CATALOGUE OF
ய சட்டியென்னும் புலையன் ஒரு தபோதனரால் தன்னோய் தீரப்பெற று அவரிடம் மிக இரந்து பருவகாலத்திற் கொல்லாதிருத்தலென்னும் விரதம் மேற்கொண்டிருந்தான். பின்பு அரசன் தன்நாட்டில் அந் நோய் நீங்கற்பொருட்டுச் சீலதாருபதேசப்படி சுக்கிலாஷ்டமி முதல் பர்வம் வரையில் கொலை நிகழாதபடி செய்து அருகக்கடவுளுக்கு நை மித்திகபூசை நடத்திவர, சதுர்த்தசியன்று மந்திரி புரோகித சேனா பதி குமாரர் மூவரும் ரஹஸ்யத்தில் ஆடு கொன்று தின்றனர். அதனை மாலைக்காரனுக்கும் அவன் மனைவிக்கும் நடந்த வாக்குவாதத்தினால் நகரிசோதனைக்குச்சென்ற அரசனறிந்து மறுநாளில் ஆடுகொன்ற மூவ ரையும் கொல்லும்படி விதிக்க, சட்டிப்புலையன், 'இன்று பருவமாதலால் அத்தொழிலைச் செய்யேன்' என, அரசன் சினந்து அந்நால்வரையும் கிடங்கிலுள்ள முதலைக்கு இரையாகும்படி தள்ளுவிக்க, முதலை மற்ற மூவரையுமிழுப்ப, அப்பொழுது மனமாறாத சட்டிப்புலையனது விரததி டத்தைத் தேவேந்திரன் கண்டு மகிழ்ந்து தேவஸ்திரீகளுக்குக் கட்டளை யிட, அவர்கள் அக்கிடங்கின் நீருக்குமேவே சிங்காதனமிட்டு அதில் அவனை இருக்கச்செய்து பூசிக்க, அரசன்கண்டு அதிசயித்து அஞ்சிப்ப ணிந்தானென்று கொல்லாமையின் பெருமையை விளக்குவது ; பூர்த் தியுடையது; 143-வது ஏடு ஒடிந்திருக்கிறது.
No. 396. சதமுகராவணன்கதை. SATAMUKARĀVANANKADAI.
Substance, palm-leaf. Size, 17 x 13 inches.
Pages, 134. Lines, 7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete.
Wants beginning.
This story says that, after Rama had conquered Ravana in the battlefield, a Rākṣasa named Satamukharavana (meaning a hundred-faced Ravana) came and overpowered Rama and his army, whereupon Sita assumed a gigantic form and killed him. Beginning :
ப்போட்டல் தேவாந்தகன் சுவாமி பாணத்தினாலே அறுபட்டுப்போ னதைக்கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனீசுவரர்களும் சந் தோஷத்தையடைந்து தேவதுந்துமியிற் பதினெட்டுவகை மேள வாத் தியங்களும் வௌங்கி, சுவாமிபேரிவே புஷ்பமாரி[ப்] பொழிந்(து) "சுவாமி! தேவரீருடைய (கிருபா கடாட்சத்தினாவே தேவாந்தகனு டைய உபத்திரவம் தீர்ந்தோம் " என்று சுவாமியைத் தோத்திரஞ்
For Private and Personal Use Only