________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
348)
A DESCRIPTIVE CATALOGUE OF
ஸௌந்தர்யா திசயத்தினைப் பிறர் சொல்லக்கேட்டு இவளையே காமுற் றுச் செல்கின்ற நாளில் ஒத்தாயண மஹாராஜன் மாற்றாசனொருவன் மேல் படையெழுந்துபோக, அது கேட்டு ப்ரத்யோதனன் பலத்தோடும் கூடச்சென்று ரோரூஹபுரமடைந்து ஒத்தாயண மஹாராஜன் பவனங் குறுகி இவளைக் கைப் படித்துக் கொண்டுபோகக் கருதினான்).
End :
' நீ ஆர் ஹதவை தறியாது யான் செய்த உபஸர்க்கமெல்லாம் க்ஷமிப் பாயாக ' என்று தளைவிட்டு உபசாரஞ்செய்ய அவனும் வந்து நமஸ்க ரித்துக்கிடப்ப, ' தர்ம்மத் துள்ளாரை அஜ்ஞானம்பண்ணிப் பிழைசெய் தேன்' என்று அவன் மஸ்சகத்துப்பொறித்த நாய்ப்பொ தீரப் பொற் பட்டங்கட்டிச் சாதுரங்க பலத்தோடு) (மு) கொடுத்து அவனுக்கு ராஜ்யத்துக்கு வேண்டும் வஸ்து வாஹனதிகளெல்லாங் கொடுப்ப, கொண்டுபோய்த் தன்னகரமடைந்து ராஜ்யம்பண்ணி இனிதருந்த னன்.
இவ்வண்ணம் அறத்துள்ளார்க்கு அன்புடைமையாகிய வாத்ஸல்ய மென்னும் தர்சனாங்கத்திற்கு முன் சொல்லப்பட்ட ஒத்தாயண மஹா ராஜன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்றவாறு.
சுபமஸ்து . (த-பு.)
இஃது ஒத்தாயண மாராஜன் பகைமேற் சென்றிருந்த பொழுதில் அவன் மனைவியாகிய பிரபாவதிய விரும்பி, உஜ்ஜயினியரசன பிரத் தியோதனன் அங்கே வந்து அவள் கையைப் பிடிக்கத்தொடங்கினான். அதனையறிந்த அவள் நடுநடுங்கி, ' என் கற்பு நில கெடாதருள வேண் டும் ; கெடின் உயிர் வாயேன் ' என்று கடவுளைத் துதித்தனள். யக்ஷி தேவதை தோன்றி அவனத்தள்ளி மூர்ச்சிக்கச் செய்தது. இதனைப் பரிசனங்களாலறிந்த ஒத்தாயண மஹாராஜன் கடி திற் பகைவென்று வந்து அவனைப் பிடித்துக்கட்டி. அவன் நெற்றியில் நாய் முத்திரை பொறித்துத் தண்டப் பிரத்தியோதனனென்று பெயருமிட்டு அவன் பொருளனைத்தையுங் கைக்கொண்டு அவகச் சிறையிட்டனன். இதி னை அந்தப் பிரத்தியோ கனனுடைய பால்ய ஸ்நேவராகிய காளயவ ரென்னும் ஆகாச சாரணர் அரிந்து அக கேவந்து அவனுக்கு ஜின தர்மங்களை யுபதேசித்து ' சிவ வ்ரதங்களைத் தப்பாமவ் அனுஷ்டித்தால் உன் துயரங் கெடும்' என்று சொல்லிப்போக, அவனும் மெய்யாக அனுஷ்டித்து வந்தான். பின்பு ஒத்தாயண மஹாராஜன் அவனை ஆர் ஹதனென்று அறிந்து உபசரித்து ராஜ்யங்கொடுத்தனுப்பினானென்று கூறுவது; பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only