________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
264
A DEBORIPTIVE CATALOGUE OF
கொண்டு விராடநகரத்தில் இருக்கும்போது திரௌபதி குறத் திவேடம் பூண்டு மாயையாற் குழந்தைவடிவான கிருஷ்ணனுடன் அஸ்தினாபுரி வந்து குறி சொன்னாளென்று புனைந்துரைக்கப்பட்டுள்ளது; செய்யுள் நடை சிறந்ததன்று; இடையே வசனமும் கலக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிரதி மிகவும் சிதிலமாயிருக்கிறது.
No. 308. குற்றாலக்குறவஞ்சி.
KORRĀLAKKURAVANJI. Substance, palm-leaf. Size, 13 x 1g inches. Pages, 118. Lines,
6 or 7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
A poem dedicated to the praise of Śiva as worshipped in the temple at Korrālam in the Tinnevelly district; by Tirikütarājappakavirāyar. Beginning :
பவளமால் வரையி னிலவெறிப்பது போற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற் றிவளமா துடனின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும்போர் தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றரித்துயர் கிரிப்புறத் தெழுதுங் கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம். காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுங் கடைவாய்ப் படுமுன்னே - மேல்விழுந்தே யுற்றா ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர் கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட மாம(த)த் தருவி பா(ய) மலை யென வளர்ந்த மேனிக் காமலி தருப்போ லைந்து கைவவான் காவ லானே.
தேர் கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர் பார்கொண்(ட) விடை யிலேறும் பவனியெச் சரிக்கை கூற
For Private and Personal Use Only