________________
Shri Mahavir Jain Aradhana Kendra
170
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.210.கலித்தொகை, உரையுடன்.
KALITTOHAI WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 14 × 1 inches. Pages, 69. Lines, 11 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Incomplete.
Same work as the above.
For the beginning, see under the previous number.
End:
66
அலர்ந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலா னிலங்கெயி லெய்ப்பிறந்த வெரிபோல வெவ்வாயுங் கனைகதிர் தெறுதலிற் கடுத்தெழுந்த காமத்தீ மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழன் மயங்கதர் மறுகலின் மலைதலைக் கொண்டென விசும்புற நிவந்தழலும் விலங்கரும் வெஞ்சுரம்.
அரும்பெற லாதிரையா னணிபெற மலர்ந்த பெருந்தண் சண்பகம் போல வொருங்கவர் பொய்யா ராகுத றெளிந்தன
மையீ ரோதி மடமொழி யோயே.
எ - து - கருமையினையும் நெய்ப்பினையுமுடைய ஓதியினையுடைய மடப் பத்தினையுடைய மொழியினையுடையாய் ! பெறுதற்கரிய ஆதிரை நாளை யுடைய இறைவன்றிருமேனி யழகைப்பெறும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த இச்சண்பகம், பருவம்பொய்யாத வாறுபோல, அவர் தாங்கூ றிய பருவத்தைப் பொய்யாராய் வருதலை அவர்கூறியகூற்றால் நீயும் யானும் ஒருங்கே தெளிந்தேம்; அங்ஙனம் தெளிந்த பருவம் கழிவத ற்குமுன்னே வருவர்; அவர் மொழியைத்தெளிவாயாகவென ஆற்று வித்தாள்.
'முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்புழி, சொல்லாத முறைமையாற் சொல்லவும் படுமென்றலின், இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென இம்முறையே கோத்தார், நல்லந்துவனார். நெய்தற்கு ஆ சிரியன் பாரத்து வாசி நச்சினார்க்கினியான் செய்த உரைமுற்றும் (83)
For Private and Personal Use Only