SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 34
Loading...
Download File
Download File
Page Text
________________ பின்னர் புதிய தவறுகள் ஏற்படாது, பழைய தவறுகள் ஏதேனும் இருப்பின் அவை வெளியேற தொடங்கும். நாம் அந்தத் தவறுகள் மீது தான் கவனம் செலுத்த வேண்டும். தவறுகள் ஏற்படுப்படாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும். குறைகள் எந்த அளவோ, அந்த அளவு ப்ரதிக்ரமணம் (கழிவிரக்கம்) தேவை "உங்களிடம் கணக்கேயில்லாத குற்றங்குறைகள் இருந்தால், நீங்கள் அந்த அளவுக்கு கழிவிரக்கம் என்ற "பிரதிக்ரமணங்களை” மேற்கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கும் அனைத்து வகை தவறுகளும் உங்களுக்குக் கண்கூடாகத் தெரியும். ஞானியிடமிருந்து ஞானம் பெற்ற பிறகு தோஷங்கள் தெரியத் தொடங்கும், இல்லையென்றால் நம்மிடம் இருக்கும் தோஷங்கள் புலப்படாது. நமது குறைகள் தெரியாது என்பது ஒருபுறம், மற்றவர்களுடையவை நிறையவே தெரியும். இந்த தவறான பார்வையின் பெயர் "மித்யாத்வம்”. நமக்குள்ளே இருக்கும் குற்றங்கள் மீது பார்வை இந்த ஞானம் அடைந்த பிறகு உங்களுக்குள்ளே தோன்றும் தவறான எண்ணங்கள், எதிர்மறையான சிந்தனைகள், நல்ல, ஆக்கபூர்வமான எண்ணங்களையும் பார்க்க இயலும். நல்ல எஎண்ணங்கள் மீது எந்தப் பற்றும் இருக்காது, தீயவை மீது வெறுப்பும் இருக்காது. எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் நல்லது கெட்டது பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஞானிகள் எதைப் பார்க்கிறார்கள்? அவர் உலகை குறைபாடற்றதாக பார்க்கிறார்கள். ஏனென்றால், உலகில் நடப்பவை அனைத்தும் "வெளியேற்றமாகவே” (டிஸ்சார்ஜ்) இருக்கிறது, இதில் பாவம் மனிதர்கள் என்ன செய்ய முடியும்? உங்களை யாராவது திட்டினால், அது ஒரு "வெளியேற்றம்”. உங்கள் "பாஸ்” உங்களுக்குக் கஷ்டங்கள் கொடுத்தால், அதுவும் ஒரு "வெளியேற்றம்” (டிஸ்சார்ஜ்) தான். "பாஸ்" ஒரு காரணம் மாத்திரமே. உலகத்தில் யாரும் குற்றவாளி இல்லை. நீங்கள் உலகத்தில் பார்க்கும் தவறுகள் அனைத்தும் உங்களுடையது தான். இதன் காரணமாகவே உலகம் நிலைத்திருக்கிறது. மற்றவர்களின் குற்றம் குறைகளைப் பார்ப்பதனால் பழிவாங்கும் உணர்வு ஏற்படுகிறது. ஆத்மாவை குறித்த அறியாமையே உங்களின் தவறுகளை காண பாதகமாக இருக்கிறது. மற்றவர்களின் தவறுகளை பார்ப்பதற்கு இணையாக ப்ரதிக்ரமண் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் கணக்கில்லா தவறுகள் நிறைந்த (பாத்திரம்) மனிதன் என்றால் அதற்கு ஏற்றவாரு அவ்வளவு ப்ரதிக்ரமன்கள் செய்ய வேண்டும் (ப்ரதிக்ரமன்,என்பது நாம் செய்த தவறுகளை யோசித்து முன்நிறுத்தி, அதற்கு வருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, பின்பு 31
SR No.034329
Book TitleSimple and Effective Science For Self Realization Tamil
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages64
LanguageTamil
ClassificationBook_Other
File Size54 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy