________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
412
A DESCRIPTIVE CATALOGUE OF
யும் அம்ருத மஹாலேனையுமென்பார். இவர்களோடு மஹாராஜன் இஷ்டவிஷய காமபோகங்களையனுபவித்துச் செல்லா நின்றகாலத்து ஒரு நாள் மஹாராஜன் சேலினிமஹாதேவி புத்ரனாகிய பாரிஷேண குமாரன் ஜ்யேஷ்டனாதலாலும் ஸகலகுண ஸம்பூர்ணனா தலாலும் இவ னுக்கு யௌவராஜ்யபட்டங்கொடுத்த(னன்). End:
பாரிஷேணகுமாரரும் கணஸேனன் செய்த வஞ்சனை யை நினைந்து ஸம்ஸாரவைராக்யம்வந்து ராஜ்யபாரந்து றந்து பேரணிகனென்னுந் தன் புக்ரனுக்கு ராஜ்யபதங்கொடுத்து இவனுடைய நியோகத்தின்படி செய்கவென்று ராஜாக்களையும் மந்திரிகளையும் நியோகித்துத் தேவி மாரோடுங்கூட முனிகுப்தரென்னுந் தபோதனர் ஸமீபத்தே தீக்ஷித்து த்ரிகாலயோகந்தாங்கிப் பாரிஷேணபத்தாரகராயினார்.
இவ்வண்ணம் அஸ்தேயவ்ரதத்தினை அனவத்யமாக அனுஷ்டித் தார் பெறும் அப்யுதயத்திற்குப் பாரிஷேணகுமாரன் உதாஹரணமா கச் சொல்லப்படுகின்றான் (எ-று.).
சுபமஸ்து . (கு-4.) -
இது மாத நாட்டரசனாகிய சேணிகன்,சேலினியிடத் துப்பிறந்த பாரி ஷேண னென்னும் தன் மூத்தகுமாரனை இளவரசாக்கினான். பட்டண த்து ஜனங்களும் அவனே அரசனாகவேண்டுமென விரும்பினர். சேணி கனுக்கு அமிருதமஹாசேனையிடம் பிறந்த குணசேனன் இதனையறி ந்து வருந்தித் தன் தாயிடம் சொன்னான், அவள் ஒருபாயத்தால் பாரி ஷேணனை அயோக்கியனென்றுகாட்டி உனக்கு அரசு தருவேனென்று சொல்லிச் சில திருடர்களுக்குக் கை நிறையப் பணங்கொடுத்து, ' பாரி ஷேணகுமாரனுடைய எவலால் நாங்கள் திருடுகிறோம்' என்று சொல்லும்படி செய்வித்தனள். அப்பொழுது தளவரன் பாரிஷேண குமாரனைப்பிடிக்க, அவர் தியானாரூடராயிருந்தமையால் சில தேவதை கள் வந்து பிடித்தவனைக் கீழேதள்ளிப் பூமழைபொழிந்து பாரிஷே ணரைப் பூசித்தள. பின்பு அரசன் ஐயத்தையும் ஒரு தேவன் அமிர்த சேனைசெய்த வஞ்சத்தைச் சொல்லிப் போக்கினான். பின்பு பலதேவர் கள் தளவான் தொட்ட தோஷ (ம்) நீங்கப்பாற்கடலினீராலாட்டிப்பாரி ஷேண குமாரரைச் சிங்காசனத் திருத்திப் பூசித்துத் துதித்தனர். பின்பு அரசன் அமிர்தசேனையையும் குண சேனனையுந் நாடுகடிந்து பாரிஷே ணனை அரசனாக்கித் திறந்தான். சில நாள்களுக்குப்பின் பாரிஷேணன் வைராக்கியமுற்று, தன் மகன் ரேணிகனை அரசனாக்கித் தேவியோடும் முனிகுப்தரிடம் தீக்ஷித்துத் திரிகால யோகந்தாங்கிப் பாரிஷேணபத் தாரகனாயினானென்று கூறுவது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only