________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
866
A DESCRIPTIVE CATALOGUE OB
Beginning :
(தர்ம உபலோப கூஹனமென்னுந் தர்சனாங்கத்திற்ப்ரஸித்தராகிய ஜினேந்த்ரபக்தர் சரிதமாவது).
ஜம்பூத் வீபத்துப் பரதக்ஷேத்ரத்து அங்க விஷயத்துத் தான்யபுர மென்னு நகரத்துக் கள்ளராய கீர்த்திதரன் முதலாயினார் நால்வர் கள்ளரோடு ஒரு நாள் களவுகண்ட பொருளை நாலுகூறாகப் பாகித்த இடத்துக் கீர்த்திதான் ' எனக்குப் போதாது' என்ன, ' நீ பெரு நிலை நிற்கு மத்தனையன்றோ, எங்களைப்போல க்லேசமும் ஸாமர்த்யமும் உனக்குண்டோ ' என, அவன் ' யான் என்னத்திற் சிறியேன்' என்ன, • நீ ஸமர்த்தனாகில் சம்பா நகரத்து இப்பர்குலத்து ஜினேந்த்ரபக்தர் ஜி ாைலயத்துப் பகலிரவென்று தெரியாமலெரிகின்ற மாணிக்க விளக்குக் களவுகண்டு வரவல்லையோ' என, ' இனி நீங்கள் சொன்ன இது கொடு வந்தால் அல்லது கூறுகொள்ளேன்' எ(ன்)று மாறுகொண்டுபோந்து சிந்திப்பா(ன்).
End :
ஜினேந்த்ர பக்தரைக்கண்டு ' உம்மைப்போலே எனக்கு ஸத்புத் ரரை எங்குங்கண்டதில்லை. நான் தான்யபுரத்து நின்றும் இந்த மா ணிக்க விளக்குக் காரணமாகப் பொய்த்தவம்பட்டேன். உம்முடைய ப்ரஸாதத்தால் ப்ராணம் பெற்றேன். இனி எனக்கு ஜின தீக்ஷை தரு விப்பீராமின் ' என, அவரும் இவரது சித்தவ்ருத்தியறிந்து ' இன்னந் தான் உனக்குத் துறவு நிற்குமோ' என்ன, ' யான் ஸம்ஸார வைராக் யத்தால் ஸம்யக்தர்சனங்கைக்கொண்டேன்' என்று ஸத்யமாகச் சொல்லியபின் ஸந்தோஷித்து யமதரரென்னுங் குருக்கள் பார்ச்வத் தே தீக்ஷிப்பித்தார். அவரும் தபச்சாண விசுத்தராகிக் கீர்த்திதாபத் தாரகரென்னுந் திவ்யதபோதனரானார்.
இவ்வண்ணம் அறத்துள்ளார் செய்த பழி நீக்குதவென்னுந் தர்ச னாங்கத்தில் ஜினேந்த்ரபக்தர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றார். (எ - று.)
நமோஸ்து.
(கு-பு.)
இது சினேந்திர பக்தரென்பவர், தாம் கட்டிவைத்த ஜினாலயத்து ள்ள மாணிக்க தீபத்தைத் திருடி வருவதாக திருடர் நால்வருள் ஒருவ ராகிய கீர்த்திதரரென்பவர் மற்ற மூவரோடும் பந்தயம் போட்டுக் கொண்டு ஆர்கதவேஷத்தோடுவந்து சினேந்திரபக்தர் வியாபாரத் தின் பொருட்டு ஒரு சோலையில் பரஸ்தானமாக இருந்தபொழுது அவ் விளக்கைத் திருடித் தன் ஒலியலில் சுற்றிக்கொண்டு புறப்பட, அந்
For Private and Personal Use Only