________________
Shri Mahavir Jain Aradhana Kendra
270
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
பூவாய்த்த கற்பகப்பூம் பொங்கரிடத்திற் சிறந்தோன் றூவாய்த்த செங்கமலத் துள்ளிருந்தோன் - மாவாய்த்த மார்பகத்தோ னாகமுற்றோர் வஞ்சகக்கூற்றைக்கடந்த சீர்மிகுத்த காயத் திறன்முனிவோ - ரேர்மிகுத்த மாணிக்கப் பைவிரித்து வாழுரகர் பாருறைவோ ராணிப்பொன் போன்றமறை ய கமங்கள் - பேணி
(5-4.)
திருவடியில் விண்ணப்பஞ் செய்து வணங்கி யிருமைதரு மிவ்வுலக மெல்லா - மொருமைபெறு பேரின்ப மாகியென்றும் பேரா திருந்தவிந்தச் சீரன்ப னாயேன் செறிந்தோங்கத் - தாரன்டா யின்றிவளுக் கீதி யெழில்வள்ளா லென்றியம்பி நன்றெனவே சம்மதிப்ப நன்குரைத்து - மன்றலுறு சற்குமர தேவன் றருங்குவளை மாலை நெஞ்சே யிற்பெறவே வாங்கிவா வின்று.
வெண்பா.
எவ்வுயிர்க்குந் தாயா யிருந்தின் பமுதளிக்குஞ் செவ்விதரு சற்குமர தேவன்பா - லவ்வியந்தீர் நெஞ்சமே செங்குவளை நீண்மாலை வாங்கிவரச் செஞ்செவே தூதாகிச் செல்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சிவன்றிரு வுருவா மைந்து சின்மய வெழுத்தும் வாழி நவன்றரு நீறும் வாழி நயன நன் மணியும் வாழி கவின்றரு குமார தேவன் கழலிணை யிரண்டும் வாழி யவன்றிரு வடியார் தம்மோ டாருயி ரனைத்தும் வாழி.
திருச்சிற்றம்பலம். குருவே நம.
குமாரதேவர் விருத்தாசலத்திலிருந்த ஒரு துறவி ; சாந்தலிங்கசு வாமிகளுடைய சிஷ்யர்; இவர் பூர்வாச்சிரமத்தில் கன்னடதேசத்தை யாண்ட ஓர் அரசர் என்பர்; வீரசைவ மதஸ்தர் ; இவர் செய்த சாஸ் திரங்கள் (14) உள்ளன. இந்நூல் இவர்மீது இவர் மாணாக்கராகிய திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் இயற்றியது; செய்யுள் நடைசிறந் தது ; இந்தப்பிரதியிற் பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only