________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
104
A DESCRIPTIVE CATALOGUE QË
நன்றியறிதல் பொறையுடைமை யின் சொவொ டின்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியொ டொப்புர வாற்ற வறித வறிவுடைமை நவ்லினத் தாரோடு நட்ட லிவையெட்டுஞ் சொல்லிய வாசார வித்து. எ - து, தனக்குப் பிறர் செய்த நன்றி அறிதலும் பொறையும் இன் சொல்லும் எவ்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும் கல்வி யும் ஒப்புரவை மிக அறிதலும் அறிவுடைமையும் நல்லினத்தாரோடு நட்டலுமென இவ்வெட்டுவகையும் நல்லாராற் சொல்லப்பட்ட ஆசார ங்கட்குக் காரணம் (எ - று). End:
உரற்களத்து மட்டிலும் பெண்டிர்கண் மேலு நடுக்கற்ற காட்சியார் நோக்கா ரெடுத்திசையா ரில்லம் புகாஅர் விடல். எ - து, சோர்வற்ற அறிவையுடையவர் , ஆரவாரம் செய்யும் இட த்தும் மடைப்பள்ளியிலும் பெண்டீர்கள் உறையிடத்தும் நோக்கார் எடுத்துரையார் இல்லத்துட்புகார் ஆதலால் நீ விடுக (எ - று). (100)
அறியாத தேயத்தா னாதுவன் மூத்தா னிளையா னுயிரிழந்தா னஞ்சினா னுண்பா னரசர் தொழிறலை வைத்தான் மணாளனென் றொன்பதின்மர் கண்டீ ருரைக்குங்கான் மெய்யான வாசாரம் வீடுபெற்றார். எ - து, அறியாத தேசத்தான், வறியோன், மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன் , அரசர்தொழிலில் தலைவை த்தவன் , மண மகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையாயு. ரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவார் (எ - று).
(101)
ஆசாரக்கோவை முற்றிற்று.
(த-பு.)--
இது, சங்கமருவிய பதினெண் கீழ்க்கணக்குக்களுள் ஒன்று ; ஆசார க்தைத் தெரிவிப்பது ; 101-வெண்பாக்களாலாகியது ; இதை இயற்றிய வர் வெண்கயத்தூர்ப் * பெருவாயின் முள்ளியார். இந்தப் பிரதியில் இந்நூல் பொழிப்புரையுடன் பூர்த்தியாயிருக்கிறது. அச்சிடப்பெற் றுள்ளது.
* இது, வண் கயத் தூரெனச் சிலபிரதிகளிற் காணப்படுகிறது.
For Private and Personal Use Only