SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 53
Loading...
Download File
Download File
Page Text
________________ பகவானின் சட்டம் என்ன? எந்த ஒரு காலகட்டத்திலும், எந்த ஒரு இடத்திலும், யார் அனுபவிக்கிறார்களோ அவர் தான் தவறிழைத்தவர், என்று கடவுளின் சட்டம் உரைக்கிறது. ஜேப்படித் திருடன், திருடிய பிறகு சந்தோஷமாக இருக்கிறான், அவன் இனிப்புகளைத் தின்று கொண்டிருக்கிறான், ஹோட்டலில் சிற்றுண்டி உண்டு, தேநீர் அருந்தி ஆனந்தமாக இருக்கிறான்; அதே வேளையில், பணத்தைப் பறி கொடுத்தவர் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அதனால் துக்கம் அனுபவிப்பவருடைய தவறு தான். இவர் முன்பு எங்கேயாவது களவு புரிந்திருக்கலாம், இன்று பிடிப்பட்டிருக்கிறார், வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். இயற்கையின் நீதியில், இவர் தான் கள்வன். ஆனால் திருட்டு புரிந்தவன், பிடிபடும் போது, திருடன் என்று பழிக்கப்படுவான். அடுத்தவரிடத்தில் தவறைக் காண்கிறது உலகம், இப்படிச் செய்யும் போது, நமது பிழைகள் இரட்டிப்பாகி, வாழ்க்கைகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்றால், பிரச்சனைகள் குறையத் தொடங்கும். இவ்வுலகின் நீதி என்னவென்றால், கண்களால் காண்பதையே, தவறு என்பது. ஆனால் இயற்கையின் நீதி என்னவென்றால், யார் வேதனை படுகிறார்களோ, அவர்களின் தவறு. சற்று கூட யாருக்கும் துக்கம் அளிக்காத நிலையில், மற்றவர்கள் உங்களுக்கு கொடுக்கும் துக்கத்தை அமைதியாக ஏற்று கொண்டால், உங்களின் கடந்தகாலக் கணக்குகள் முடிவுக்கு வரும், நீங்கள் விடுபடுவீர்கள். கர்மத்திலிருந்து விடுதலை அளிப்பவர் உபகாரி உலகில் யாருடைய தவறும் இல்லை, தவறை கண்டுபிடிப்பவரின் தவறுதான். அவரவர், தத்தமது கர்மவினைகளின் பலன்களையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது குற்றங்களைப் புரிகிறார்கள் என்பது இல்லை. அவர்கள் இன்று அனுபவிப்பவை எல்லாம் கடந்த பிறவியின் பலாபலன்களே. இன்று அவர் அதற்கு வேண்டி வருத்தப்படலாம், ஆனால் முந்தய ஒப்பந்தத்தின் பலன் தான். கர்மபலனை எதிர் கொண்டே ஆக வேண்டும். மருமகள், மாமியாரிடம் சண்டை போட்ட பிறகு கூட, சந்தோஷமாக இருக்கிறார், ஆனால் மாமியார் தான் வேதனை படுகிறார் என்றால், தவறு மாமியாருடையது தான். உங்கள் ஓரகத்தியோடு மோதிய பிறகு நீங்கள் துக்கம் அனுபவிக்க நேர்ந்தால், தவறு உங்களுடையது தான்; நீங்கள் அவருடன் மோதாமல் இருந்த போதும், அவர் உங்களுக்கு துக்கம் அளித்தால், கடந்த பிறவியின் பாக்கி செலுத்தப்படுகிறது. கணக்கில் வராதது என்ற ஒன்று, இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. முற்பிறவி கணக்கு இல்லையென்றால், 50
SR No.034329
Book TitleSimple and Effective Science For Self Realization Tamil
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages64
LanguageTamil
ClassificationBook_Other
File Size54 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy