________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
120
À DÉSCRIPTIVE CATALOGUE OF
Beginning :
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து-- முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் கு றுதியா
வெண்பா வுரைப்பன் சில. (க-வுள் வாழ்த்து) காமாதி மூன்றையும் ஒழித்து முற்றுமுணர்ந்து மூப்பில்லாதான் பாதத்தை, மனக்குற்றம் நீக்கி மிகவும் வணங்கி, பல குணங்களையும் புகழ்ந்து, மண்பரந்த உலகில் மக்கட்கெல்லாம் உ றுதியாகிய பொருண்மேல் தொடுத்து, வெண்பாவாகிய சில செய்யுட் களை உரைப்பன்.
ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களவோ டொத்த விவையல்ல வோர் நாலுட்--டொக்க வுறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர் சிறு பஞ்ச மூலஞ் சிறந்து . எ-து, பொருந்திய ஒழுக்கமும், கொலை பொய் புலால் களவோடு ஒ த்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய நான்கும், என்று சொல் லப்பட்ட இவ்வைந்தும் அகப்பட மிக்க பஞ்சத்தின் மூலத்தைத் தீர்க் கும் மாரிபோலச் சிறுபஞ்சமூலமென்னும் மருந்தாகக் கூறீர் மிக்கு. End:
வழிப்படர் வாய்ப்ப வருந்தாமை வாயல் குழிப்படர் தேய்ச்சொற்களோடு - மொழிப்பட்ட காய்ந்து விடுதல் களைந்துய்யக் கற்றவ
சாய்ந்து விடுத வறம். எ-து, பிறர்வழிச்செலவு, வாய்க்குங்காரியங்களை முயன்று வருந்தா மை, மெய்ம்மையல்லாத நெறியிற்சேறல், பிறரைப்பழித்துக் கூறுஞ் சொற்கள், நவ்லார் சொல்லப்பட்ட குணங்களைந்து நீங்குதல் என இவ் வைந்தையும் கற்றறிவார் களைந்து நீத்தல் அறமாவது.
(98) மல்லிவர்தோண் மாக்கயவன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினாற்- கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரியாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.
சிறுபஞ்ச மூலம் முற்றிற்று. (கு-பு.)
இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று; இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் ஐவைந்து நீதிகள் கூறப்பெற்றுள்ளன ; இந்நூலை இ யற்றியவர் ஜைனமதத்தினராகிய காரியாசானென்பவர் ; இந்தப்பிரதி யில் இந்நூல் திருத்தமா பும், பூர்த்தியாயும் பழுதில்லாமலும் உரையுட ன் இருக்கிறது ; இதன் இறுதி வெண்பாவிற் குறித்த ‘ மாக்கயவன்' எ ன்ற பெயர், அச்சுப்பிரதியில் ' மாக்காயன் ' என்று காணப்படுகிறது.
For Private and Personal Use Only