SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 449
Loading...
Download File
Download File
Page Text
________________ गणिनी आर्यिकारत्न श्री ज्ञानमता अभिवन्दन ग्रन्थ [R09 கர்நாடக மாநிலத்தில் அறப் பயணம் ஹைதரபாத் நகரத்தில் சாதுர்மாத தவத்தையும் தீக்ஷை கொடுக்கும் வைபவத்தையும் முடித்துக் கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி அறப் பயணத்தைத் துவக்கினார். பாதயாத்திரையாகவே அதிசய க்ஷேத்திரமாகிய 'ஸ்ரவணபௌகுளம்' வந்து அங்கு கி.பி. 1965 ஆம் ஆண்டு சாதுர்மாத தவத்தை மேற்கொண்டார். தியான சாதனை ஆன்மாவில் ஆழ்ந்த சிந்தனையே அழியா இன்பத்திற்கு அற்புதத் திரவுகோல். ஒருவர் தம் பணியில் வெற்றிபெற ஆழ்ந்த சிந்தனையும் அயரா உழைப்பும் அவசியம் தேவை. ஒவ்வொருவரும் ஆன்ம நலம் பெறவேண்டிய சாதனையில் அயராது உழைக்க வேண்டும். எல்லாசாதனைகளிலும் தியான சாதனைதான் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய வேண்டும். நாம் எல்லொரும் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு தியானத்தைச் செய்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் அந்த தயானம் நல்ல தியானமாக இருக்க வேண்டும். தியானம் நான்கு வகைப்பட்டு (1) ஆர்த்த தியானம் (2) ரௌத்திர தியானம் (3) தரம் தியானம் (4) சுக்லதியானம் என. இவைகளில் முதல் இரண்டு தியானத்தை அல்லும் பகலும் அயராது நாம் செய்துதான் வருகிறோம். ஆனால் இவ்விரண்டும் பிறவிச் சுழலுக்குதான் காரணம் என்பதை நன்கு அறிந்த ஞானமதி மாதாஜீ இவைகளை விட்டு தர்மதியானத்தில் ஆழ்ந்தார். அதற்கு ஏற்ற ஸ்வணபௌகுளம் திருத்தலமும் சிறப்பாக அமைந்த்தது. சுக்ல தியானமோ இக்காலத்தில் யாருக்குமே ஏற்படுவதில்லை. இது காலத்தின் கோலம். ஒவ்வொருவரும் ஆர்த்த ரௌத்திர தியானங்களை விட்டு தர்மதியானத்தில் ஈடுபட்டு தன்னுடைய அறிய நேரத்தை - ஆன்மநலம் பெற முயல்வது சாலச்சிறந்தது. சாதுர்மாத காலங்களில் தர்ம தியானசாதளையில் ஈடுபாடு கொண்ட பூ. மாதாஜீ 15 நாட்கள் முழு நேரமும் மௌனவிரத்ம் ஏற்று விந்தியகிரி மலைமீது சென்று பகவான் பாகுபலி சுவாமியின் திருவடி அருகில் அமைந்து தியானம் செய்து வந்தார். இவருடன் ஆர்யிகை பத்மாவதி மாதாஜீ மட்டும் இருந்தார். சங்கத்திலுள்ள மற்ற துறவிகள் கிராமத்திலேயே தங்கி இருந்தனர். ஆகாரம் ஏற்பதற்கு மட்டும் கீழே வருவது, மற்ற நேரங்களில் இரவும் பகலும் மலை மீதே தங்கி தியைன சாதனையில் அயராது ஆழ்ந்து இருந்து வந்தார். இரவில் சிறிது நேரம் மட்டும் உறங்குவது மற்ற நேரங்களில் தியான சாதனையிலேயே ஈடுபட்டிருந்தார். தியானத்தில் கண்ட அற்புதக் காட்சி. பல நாட்கள் வரை இந்த தியான சாதனையில் தொடர்சி இருந்து வந்தது. ஒருநாள் அவர் தம் தியானத்தில் ஒளிமயமான அக்ருத்திம சைத்தியால்யம் காணப்பட்டது. உயரமான மேரு பர்வதம் ஜம்பூத்வீபம் கங்கை சிந்து நதிகள் விதேக க்ஷேத்திரம் அங்குள்ள எழல்மிகு இயற்கை காட்சி ஆகியவையும் காணப்பட்டன. இந்த அற்புதமான ஒப்பற்ற காட்சியைக் கண்ட பூஜ்ய ஞானமதி மாதாஜிக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மறுநாள் காலை மலையிலிருந்து கீழே வந்து பல ஆகம நூல்களை புறட்டிப்பர்த்தார். அவைகளில் திரிலோகசாரம் திலோய பண்ணத்தி ஆகிய கரணனுயோக நூல்களில் அவர் தியானத்தில் கண்ட காட்சி அளைத்தும் அப்படிக்கப்படியே இருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். தினந்தோரும் இதே தியானத்தின் தொடர்ச்சி இருந்துக் கொண்டே வந்து இதில் அன்று கண்ட அக்குத்திம சைத்தியாலயத் தொடர்ச்சியும் பிறதிபலித்துக் கொண்டே இருந்தது. தர்மதியானத்தின் ஒரு அங்கமாகிய சம்ஸ்தான விசயதர்ம தியானத்தையே அவர் செய்து வந்தார். அந்த தியானத்தில் தான் இத்தகு காட்சிகள் காணப்பட்டடன. பூ. மாதாஜீ அவர்கள் கைகொண்ட மௌண விரத நாட்களும் முடிவு பெற்றன. அத்துடன் மேற்கூறிய தியான தொடர்ச்சியும் முடிவு பெற்றது. இந்த தியானத்தின் ஒருநிலை உணர்வு முற்பிறவியில் கிடைத்த நல்வினைப் பயனால்தான் கிடைத்தது என நன் நம்பிக்கை கொண்ட மாதாஜீ இதைப்பற்றி தம் சங்கத்தாருக்கும் ஸ்ரவணபௌகுளம் பீடாதிபதியாகிய சாருகீர்திபட்டாரக சுவாமியார் அவர்களுக்கும் கூறினார். இதைக்கேட்ட பட்டாரக சுவாமியார் அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்து மாதாஜீ அவர்களை பாராட்டினார். சங்கத்திலிருந்த தியாகிகளும் கூட இரும்பூதடைந்து தியானத்தில் கண்ட அக்ருத்திம சைத்தியாலயத்தின் அமைப்பு யாவும் இந்த பாரதபூமியில் உள்ள மக்கள் காணும் வண்ணம் உருவமாக அமைக்கவேண்டும் என்று பேராவல் கொண்டு கூறினர். தென்னிந்தியாவில் கண்ட தியானத்தின் காட்சி வட இந்தியாவில் உருவம் கொண்டது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரவணபௌகுளம் திருத்தலத்தில் பூஜ்ய மாதாஜீ அவர்கள் தியான சாதனையில் கண்ட ஜம்பூத்வீபம் சுமேரு பர்வதம் ஆகியவைகளை உருவமாக பாரத பூமியில் அமைத்து உலக மக்களுக்கு தான் பெருமையையும் மகிமையையும் சிறப்பினையும் எடுத்துக் காட்டவேண்டும் எள்கிற ஆவலுடன் இதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த இடத்தை தேர்ந்தெடுக்கும் எண்ணத்தில் ஆழ்ந்து கர்நாடக மாநிலத்திலிருந்து புறப்பட்டு வட இந்தியாவில் வந்த மாதாஜீ அதற்கென ஹஸ்தினாபுரம் சிறந்த இடம் என முடிவெடுத்து கி.பி. 1975ல் அங்கு திகம்பர ஜைன மூவுலக ஆய்வுக்கழகம் (Shree Digambar Jain Threelok Sohda Samsthan) என்கிற நிருவனத்தை துவக்கி அதற்கென சொந்தமான நிலத்தையும் வாங்கி ஜம்பூத்வீப நிர்மாபண பணியை அரம்பிக்கச் செய்தார். அதில் முதல் Jain Educationa international For Personal and Private Use Only www.jainelibrary.org/
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy